திங்கள், 18 மே, 2015

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடுவா ராத நட்பும்


கன்றாத வளமையும் குன்றாத இளமையும்


கழுபிணி யிலாத உடலும்


சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்


தவறாத சந்தா னமும்


தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்


தடைகள் வாராத கொடையும்


தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு


துன்பமில்லாத வாழ்வும்


துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய


தொண்டரொடு கூட்டு கண்டாய்


அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே


ஆதிகட வூரின் வாழ்வே


அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி,



அருள்வாய் அபிராமியே!

- அபிராமி அம்மன் பதிகம் (அபிராமி பட்டர்)


Read more: http://www.penmai.com/forums/ask-question/76322-abirami-amman-pathigam-lyrics.html#ixzz3aYP0PnUy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக