செவ்வாய், 1 மே, 2012

அன்பான அனைவருக்கும்

யார் மனதில் என்ன ? யாருக்குத்தெரியும்.
 எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்று நம் உற்றவர்களிடம்கூட சொல்ல முடியாத சில விஷயங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் . 

அது  எதனால்  சொல்லாமல் மறைக்கப்படுகிறது?. எதற்கு பயந்து அது  சொல்லப்படவில்லை? தம் மரணம் வரையில் யாரிடமும் சொல்லாமல்  இருப்பதன் காரணம் என்ன?

இந்த   சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஏதோ ஒன்றை செய்து அதற்க்கு பயந்து அது வெளியே தெரிந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி , இஞ்சி தின்ற  குரங்காக அலையாதவர்கள் நம்மில் எத்தனை  பேர்?

சமீபத்தில் தங்கமலை ரகசியம் திரைப்படம் கண்டேன் .
இது வேறு விதமானது . தன்னைப்பற்றி அறியாத ஒருவன் அவன் பிறப்பு, குலம் , தாய் ,தந்தை, மற்றும் எதிரி ஆகியோரை அறிந்து கொள்வதே படத்தின் கரு.

 இவை அனைத்தையும்விட ஒன்றை நான் அன்று உணர்ந்தேன். எனக்கு தாய் தந்தை உறவினர் எல்லாம் உண்டு. நான் யார் என்பதும், எதற்காக பிறந்தேன் என்பதும் , ஏன் படைக்கப்பட்டேன் என்றும் கேட்கத்தயாரானேன். நண்பரிடம் சொன்னேன் . "இப்பத்தான் லேசா தொடங்குதோ" என்று தனது நெற்றிப்பொட்டின் அருகே ஆட்காட்டி விரலை சுற்றிக்கட்டினார்.

    சரி என்ன செய்ய இருக்கவே இருக்குது வலை தளம் .யார் கிட்டயாவது 
 கேப்போமுன்னு ........................................ உடனே   தொடங்கிவிட்டேன் ஒரு ப்ளாக்(யாராவது தமிழ்ப்படுத்தவும்).

முதலில் ரகசியம்னா    என்னன்னு  யாராவது இத  படிக்கிறவங்க  சொல்லுங்க.

அன்புட ன் 

ஜோஜோ .